யாரும் பெண் கொடுக்க வில்லை!விரக்தியில் போலீஸ்காரர் செய்த செயல்!

Published:

policebride - 2026

போலீஸ் கான்ஸ்டபிளுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை. பதவி உயர்வும் கிடைப்பதில்லை என்பதால் கான்ஸ்டபிள் ராஜினாமா செய்துள்ளார்.

சார்மினார் போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் சித்தாந்த ப்ரதாப் செப்டம்பரில் வேலையில் இருந்து ராஜினாமா செய்வதாக எழுதிய கடிதம் மாநில அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

கான்ஸ்டபிள் பணியில் வாழ்க்கை முன்னேறுவது இல்லை என்ற மன வருத்தத்தில் ஒரு கான்ஸ்டபிள் செய்த ராஜினாமாவை ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனீகுமார் திங்களன்று ஏற்றுக்கொண்டார்

அதன் காரணங்களை ஆராய்ந்த கமிஷனர் ராஜினாமாவை அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்தார்.

இன்ஜினியரிங் படித்த பிரதாப் 2014ல் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தார்.

சில காலங்களாக தன் சீனியர்களை பரிசீலித்து கவனித்து வந்தார். 35 வருட சர்வீஸ் முடித்தும் கூட கான்ஸ்டபிளாகவே வேலை ஓய்வு பெறும் விஷயத்தை அறிந்தார்.

இத்தனை சர்வீஸ் உள்ள பிற பிரிவுகளில் ஸ்பெஷல் கிரேடும் இன்கிரிமென்டும் கிடைக்கின்றன. சப்-இன்ஸ்பெக்டர், அதற்கும் மேல் உள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வோடு வாகனம் பெட்ரோல் போன்ற பிற வசதிகள் இருக்கையில் கான்ஸ்டபிள்களுக்கு அது போன்றவை எதுவும் இல்லை என்று தன் மன வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

கான்ஸ்டபிள் பணி என்று தெரிந்தால் திருமணத்திற்கு யாரும் பெண் கொடுப்பதில்லை. கொடுக்கத் தயங்குகிறார்கள் என்று வருந்தியுள்ளார்.

அவருடைய ராஜினாமாவை பற்றி பிரதாப் மறுபரிசீலனை செய்வார் என்று நினைத்த நிலையில் ராஜினாமாவை அங்கீகரிப்பதாக உத்தரவு வந்துள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img