சித்தூர் இளைஞனின் உயிரை வாங்கிய ஜல்லிக்கட்டு! ஐசியூவில் மேலும் மூவர்!

Published:

JALLIKATTU 3 - 2026
file picture

சித்தூர் மாவட்டத்தில் நடத்திய ஜல்லிக்கட்டு ரத்தக் களரியானது. போலீசார் அனுமதி நிராகரித்தாலும் தம் இஷ்டத்திற்கு ஜல்லிக்கட்டு நடத்தியுள்ளனர்.

கிராமிய கலாச்சாரம் என்று கூறிக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் துன்புறுத்தும் இந்த விளையாட்டு சில குடும்பங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சித்தூர் மாவட்டத்தில் ஞாயிறன்று நடந்த ஜல்லிக்கட்டு ஆபத்தாக முடிந்தது. ராமகுப்பம் கிராமத்தில் ஜல்லிக்கட்டால் ஒரு இளைஞன் மரணம் அடைந்தார். மேலும் மூவருக்கு தீவிர காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்தவமனையில் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இளைஞர் மீது காளை பாய்ந்ததால் கொம்பு அவர் உடலில் குத்திக் கிழித்தது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணித்தார்.

சங்கராந்திக்கு ஒரு மாதம் முன்பிருந்தே சித்தூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம் ஆகிவிட்டது. மைதானத்தில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு கூட செய்து கொள்ளவில்லை. போலீசார் அனுமதியும் கிடைக்கவில்லை.

இவ்வாறு இளைஞர்களின் உயிரோடு விளையாடுவது பற்றி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img