தெலங்காணாவில் அதிர்ந்தது பூமி! அச்சத்தில் ஓடிய மக்கள்!

Published:

telangana earthquake - 2026

தெலங்காணாவில் ஞாயிறு அன்று விடியற்காலை பூமி அதிர்ந்தது. இதனால் உள்ளூர்வாசிகள் அச்சத்தோடு வெளியே ஓட்டம் எடுத்தனர். சூர்யாபேட்டை சிந்தலபாலெம் மண்டலத்தில் பூகம்பம் ஏற்பட்டது.

விடியற்காலை 2.37 நிமிடங்களுக்கு பெரிய அளவில் சப்தத்தோடு பூமி அதிர்ந்தது. சுமார் 41 செகண்டுகள் பூமி அதிர்வு நேர்ந்தது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. பூமியின் உள்ளே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமியின் பாளங்களில் அசைவுகள் ஏற்பட்டதாக என்ஜிஆர்ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹுஜூர்நகரோடு சேர்ந்து சூர்யா பேட்டை, நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பூகம்பம் வெளிப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக சிறிய அளவில் சிந்தலபாலெம் மண்டலத்தில் பூமி அதிர்வுகளை உள்ளூர்வாசிகள் கவனித்து வந்தனர். அதனால் அவர்கள் அச்சத்தோடு நாட்களை கடத்துகிறார்கள்.

ஞாயிறு அன்று விடியற்காலை 4.4 தீவிர ரிக்டர் அளவில் பூகம்பம் நிகழ்ந்தது. சிந்தலபாலெம் மண்டலத்தில் மீண்டும் ஐந்து மணிக்கு விடியற்காலை சிறிய அளவில் நான்கு முறை பூமி அதிர்ந்தது.

பெரிய பெரிய சத்தங்களோடு பலமுறை பூமியின் பாளங்களில் அசைவுகள் நிகழ்கின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். மேற்குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் மக்கள் வீட்டில் தங்க வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img