சென்னை; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் மேற்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுனில் நரைனின் பந்து வீச்சு முறை குறித்து சென்னையில் ரகசியமாக பரிசோதனை செய்யப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுகிறார் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன். இவர் கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பட்டம் வெல்ல முக்கியப் பங்கு வகித்தார். ஆனால் கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் போது அவர் பந்து வீசும் முறையில் சர்ச்சை ஏற்பட்டது. அவர் பந்தை எறிவது போன்று இருப்பதாக நடுவர்கள் புகார் கூறினர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினார். உலகக்கோப்பை போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் குறைபாடுகளைக் களைந்து கடந்த மாதம் இங்கிலாந்தில் உள்ள ஐசிசி சோதனை மையத்தில் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதில் அவரது பந்து வீச்சு விதிமுறைக்கு உட்பட்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டது. இருப்பினும் அவரது பந்து வீச்சு குறித்து முதன் முதலில் இந்தியாவில் இருந்துதான் பிரச்னை கிளம்பியது என்பதால், மீண்டும் ஒரு முறை, சென்னையில் உள்ள ஐசிசி பரிசோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது. இதை அடுத்து, நேற்று முன்தினம் சென்னைக்கு ரகசியமாக வந்த சுனில் நரைன், சென்னை ஐசிசி சோதனை மையத்தில் தன் பந்து வீச்சு முறையை சோதனைக்கு உட்படுத்தினார். இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அவரது பந்து வீச்சை சுமார் 2 மணி நேரம் பல்வேறு கோணங்களில் பதிவு செய்தது. அவரது பந்து வீச்சு தொடர்பான அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு பிசிசிஐயின் துணைக்கமிட்டி அவரை ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யும்.
சுனில் நரைன் பந்து வீச்சு குறித்து சென்னையில் ரகசியப் பரிசோதனை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories