April 18, 2025, 12:47 PM
34.2 C
Chennai

பச்சை ஏரி ரோஸாக மாறக் காரணம் என்ன? அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!

lonaar

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள லோனார் ஏரி திடீரென பச்சை நிறத்திலிருந்து பிங்க் நிறத்தில் மாறியுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் பல மர்மமான ஏரிகள் உள்ளன, அவை பற்றிய மர்மங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .

மும்பையிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ளது லோனார் ஏரி. நாசாவிலிருந்து உலகிலுள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இந்த ஏரியைப் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர் , ஆனால் இப்போது வரை அந்த ரகசியம் வெளியிடப்படவில்லை.

lonaar

விஞ்ஞானிகள் இந்த ஏரி விண்கல் பூமியைத் தாக்கியதால் உருவானது என்று நம்புகிறார்கள், இந்த விண்கல் உடல் சுமார் 1 மில்லியன் டன் எடையுள்ளதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த ஏரியின் ஆழம் சுமார் 150 மீட்டர். 70 களில், சில விஞ்ஞானிகள் எரிமலையிலிருந்து இந்த ஏரி தோன்றியதாகக் கூறினர். இருப்பினும், இந்த கூற்று பின்னர் தவறானது என்று நிரூபிக்கப்பட்டது.

lonaar

இந்த மர்மமான லோனார் ஏரி குறித்த சமீபத்திய ஆராய்ச்சி அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த ஏரி சுமார் 5 லட்சம் 70 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அதனால் இது இந்த ஏரி ராமாயணம் மற்றும் மகாபாரத காலத்திலும் இருந்தது என்கின்றனர்.

ALSO READ:  காதைப் பிளக்கும் ஹாரன்; அதிரடியாக அகற்றிய போக்குவரத்து காவல்துறை!

2010 க்கு முன்னர் இந்த ஏரி சுமார் 52 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்பட்டாலும், இந்த புதிய ஆராய்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த ஏரி ரிக்வேதம் மற்றும் ஸ்கந்த புராணத்திலும் காணப்படுகிறது என்று கூறப்படுகிறது. விஷ்ணு, துர்கா தேவி மற்றும் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தெய்வசுதன் கோயில் உட்பட பல பழங்கால கோயில்களின் எச்சங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .

lonaar

இந்நிலையில் வழக்கமாக பச்சை நிறத்தில் காணப்படும் இந்த லோனார் ஏரி திடீரென பிங்க் நிறத்தில் கடந்த சில நாட்களாக மாறியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அச்சமும் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து புல்தானா மாவட்ட ஆட்சியர் சுமந்த் ராவத் சந்திரபோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஏரி குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ” உலக அதியசமாகத் லோனா ஏரி இப்போது மாறிவிட்டது.

பாசிகளால் பச்சை நிறத்தில் இருக்கும் ஏரி பிங்க் நிறத்துக்கு மாறிவிட்டது. மைக்ரோபயாலஜிஸ்ட்கள் இதற்கு காரணம் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

lonaar

இதுகுறித்து புவியியல் வல்லுநர்கள் சார்பில் கூறுகையில், லோனா ஏரியின் நிறம் மாறுவது புதிதல்ல. இதற்குமுன்பும் மாறியுள்ளது என்றாலும் பிங்க் நிறத்தில் முழுமையாக மாறியுள்ளது இதுதான் முதல்முறை. மேலும் இந்த நீரில் இருக்கும் பாசிகள், மற்றும் உப்புத்தன்மையே நிறம் மாற காரணமாக இருக்கலாம்.

ALSO READ:  பிரதமர் மோடியால், ராம நவமியில் திறக்கப்படும் ராமேஸ்வரம் பாலம்!

கடந்த சில ஆண்டுகளாக மழை குறைந்துவிட்டதால், லோனார் ஏரியில் நீரின் அளவும் குறைந்துவிட்டது. இதனால், மழைநீர் சேராததால் உப்பின் அளவு அதிகரித்து இதுபோன் பிங்க் நிறமாக மாறியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories