January 25, 2025, 8:55 AM
23.2 C
Chennai

மீத்தேன் திட்டம் ரத்து: விவசாயிகளின் எதிர்ப்புக்குப் பணிந்தது மத்திய அரசு

புது தில்லி விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். நேற்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியபோது, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர், காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமரிடம் அளித்த மனு பெட்ரோலிய துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மன்னார்குடி பகுதியில் 667 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்காக ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டு இருந்தது. அந்த நிறுவனம் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தொடர்பான முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. மேலும் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதியுடன் அந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிவடைந்து விட்டது. ஆனால் அந்த பகுதியில் அந்த நிறுவனம் இதுவரை மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்த உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில், இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துக்கு (ஓ.என்.ஜி.சி.) மீத்தேன் எரிவாயு எடுக்கும் உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை.- என்று கூறினார்.

ALSO READ:  உருவானது ஃபெங்கல் புயல்; 90 கிமீ., வேகத்தில் காற்று வீசும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.