இன்றைய உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரெலிய அணியிடம் 95 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 328 ரன் என்ற இலக்கை இந்திய அணி பேட்ஸ்மென்களால் எட்ட இயலவில்லை. இந்நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இந்திய கேப்டன் தோனி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு அதிக ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது. இந்திய பந்துவீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இன்னும் சிறப்பாக பந்து வீசியிருக்க வேண்டும் என்று கூறினார். மேலும், தாம் இப்போதைக்கு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை என்றும் கூறினார்.
இன்னும் சிறப்பாகப் பந்து வீசியிருக்கலாம்: தோனி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari