காதலித்து சேர்ந்து வாழ்ந்து விட்டு கழற்றி விட்ட காதலன்! திருமண மண்டப வாயிலில் கதறிய காதலி!

Published:

woman 1 - 2026

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் தன்னோடு பணியாற்றிய ஆண் நண்பருடன் 3 ஆண்டுகள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

woman 1 1 - 2026

ஆண் நண்பருக்கு வேறொரு பெண்ணுடன் ஹோஷங்கபாத்தில் திருமணம் நடைபெறுவதை அறிந்த இளம்பெண் திருமண மண்டபத்திற்கு வெளியே கண் கலங்கியபடி பாபு பாபு என கதறி ஓங்கிய குரலில் அழுகிறார்.

போலீசார் அந்தப் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். காதல் தோல்வியால் விரக்தி அடைந்த பெண்ணிற்கு சமூக வலைத்தளங்களில் ஆறுதல்கள் குவிந்தன.

பெண்கள் தனித்து வேலைப்பார்த்து தன் காலில் நிற்கும் அதே நேரத்தில் இது போன்ற தவறுகளையும் செய்கினறனர். பெண் காதலை உணர்வு பூர்வமாக எடுத்து ஆண்மகனை நம்பிச் செல்கிறாள். தேனுண்ண வரும் வண்டீன் ரீங்காரத்தை அன்பென்று நம்பி அனைத்தையும் இழக்கிறாள். பெண்ணின் இளகிய மனதை பயன்படுத்தி நம்பிக்கை துரோகம் செய்யும் ஆண்மகன்கள் ஆண்டாண்டு காலமாய் மாறாத ஆணாதிக்க உலகம்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img