பாட்னா:

பீகார் சட்டசபை தேர்த லில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த கூட்டணியின் முதல்- மந்திரியாக நிதிஷ்குமார் கடந்த 14-ந்தேதி தேர்வு செய்யப்பட்டார்.

இன்று பிற்பகலில் பாட்னாவில் காந்தி மைதானத்தில் நட்ந்த விழாவில் பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் பதவி ஏற்று கொண்டார். அவருக்கு மாநில கவர்னர் ராம்நாத் குபிந் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.நிதிஷ்குமார் மந்திரிசபையில் லல்லு பிரசாத் யாதவின் மகன்கள் தேஜ் பிரதாப், தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர். அவர்களும் பதவி ஏற்று கொண்டார்கள்.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சார்பில் மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார். தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மற்றும் 9 மாநில முதல் மந்திரிகள், முன்னாலள் பிரதமர் எச்.டி தேவே கவுடா,தி.மு.க த்லைவர் கருணாநிதி சார்பில் மு.க ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்… : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending