பிஎஸ்எல்வி.,- சி 44 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது!

Published:

pslv c44 - 2026

நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்கும் செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி., – சி 44 ராக்கெட் உதவியுடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ இன்று விண்ணில் செலுத்துகிறது.

புவி அமைப்பு மற்றும் நாட்டின் எல்லைப் பகுதிகளை கண்காணிக்க ‘மைக்ரோசாட் – ஆர்’ என்ற இமேஜிங் செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது.

இதனுடன் மாணவர்கள் உருவாக்கியுள்ள ‘கலாம்சாட்’ என்ற, குறைந்த எடை உடைய செயற்கைக்கோளையும் சுமந்தபடி ‘பிஎஸ்எல்வி., – சி 44’ ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று இரவு 11:40 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட் – டவுன் நேற்றிரவு துவங்கியது.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img