கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் !

Published:

pinarayvijayan - 2026கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளது.இதனால் கேரளாவில் உள்ள இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணுர், எர்ணாகுளம் , திரிசூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பினை அறிவித்துள்ளது.heavy rain - 2026இடுக்கி (ஜூலை 17) கோட்டயம் (ஜூலை 18), எர்ணாகுளம் (ஜூலை 19), பாலக்காடு  (ஜூலை 19 மற்றும் 20), கோழிக்கோடு (ஜூலை 20) வயநாடு (ஜூலை 20), கண்ணூர் (ஜூலை 20) ஆகிய தினங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.

 

Related articles

Recent articles

spot_img