என் பட்டத்தை இழந்தேன்; என் ஆடியோ திரிக்கப்பட்டுள்ளது! மீரா மிதுன் புலம்பல்!

meera mithun - 2026


தான் கூலிப்படையை ஏவி ஜோ மைக்கேலை கொலை செய்ய முயற்சிக்கவில்லை என நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

நடிகை மீரா மிதுன் சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மோசடி செய்ததாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டது. மீரா மிதுன் மீது ஜோ மைக்மேல் தான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுதொடர்பாக காவல்துறையிலும் அவர் புகார் கொடுத்துள்ளார்.

meera mithun 2 - 2026

இதனால் ஆத்திரமடைந்த மீரா, ஜோ மைக்கேலை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியதாக சமீபத்தில் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கூட்டியது. இதுகுறித்து ஜோ மைக்கேல், மீரா மீது புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மீரா மிதுன், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார். ஜோ மைக்கேல் மீது இருந்த கோபம், அப்பொழுது உணர்ச்சிவசப்பட்டு என்னுடைய மேலாளரிடம் நான் கூறிய வார்த்தைகளை வைத்து எனக்கு எதிராக சதி திட்டம் தீட்டியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறியதாவது, “கடந்த 3 மாதங்களாகவே இந்த பிரச்சினை நடந்துகொண்டு இருக்கிறது. முதலில் நான் தான் கேரளாவை சேர்ந்த் அஜீத் ரவி மற்றும் ஜோ மைக்கேல் மீது புகார் கொடுத்தேன். அதற்காக என்னை பழிவாங்கவே அவர்கள் என் மீது புகார் அளித்தனர். அஜீத்தின் கூலியாள் தான் ஜோ மைக்கேல்.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

அவர்கள் கொடுத்த புகாரின் காரணமான எனது அழகி பட்டம் பறிக்கப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் என் மீது எந்த தவறும் இல்லை என்பதை நான் சட்டப்படி நிரூபித்து விட்டதால். வழக்கில் இருந்து என்னை விடுவித்துவிட்டார். அதனால் இப்பொழுது நான் கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு ஆடியோ பதிவை வைத்து என் மீது புகார் கொடுத்திருக்கிறார் ஜோ மைக்கேல். வேறு காரணங்கள் எதுவும் கிடைக்காததால், இதை கையில் எடுத்திருக்கிறார் அவர்.

meera mithun 1 - 2026

எனது மேலாளருடன் நான் பேசிய ஆடியோ தான் அது. ஆனால் அது கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வார்த்தைகள் தானே தவிர வேறொன்றும் இல்லை. நான் ஒன்றும் கூலிப்படைக்கு பணம் கொடுத்து அவரை கொலை செய்ய சொல்லவில்லை. எனது மேலாளர் ஜோ மைக்கேலிடம் விலைபோய்விட்டார். நான் அவருக்கு ஒழுங்காக தான் சம்பளம் கொடுத்து வந்தேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

நான் ஒரு நடிகை என்பதால் டப்பிங் பேசி மொபைலில் பேசுவது எனது வழக்கம். அப்படி பேசப்பட்ட ஆடியோவாக கூட அது இருக்கலாம் இல்லையா. எனது போனை திருடி ஜோவிடம் கொடுத்து இருக்கிறார் எனது மேலாளர். அதனால் அவர் மீது நிறைய சந்தேகம் இருக்கிறது.

meera mithun 4 - 2026

எனது அம்மாவுக்கு போன் செய்து தினமும் மிரட்டுகிறார்கள். எனது வீட்டிற்கு வந்து அம்மாவையும், தம்பியையும் கண்டபடி பேசுகிறார்கள். எனக்கு அப்பா கிடையாது என்பதால் ஒரு ஆண் பிள்ளையாக நான் அந்த ஸ்தானத்தில் இருந்து எனது குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன். எனது குடும்பத்தை யாராவது தொட்டால், நிச்சயம் நான் அசிங்க அசிங்கமாக பேசுவேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன்.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

ஜோவைக்கூட நான் மன்னித்துவிடுவேன். ஆனால் கேரளாவைச் சேர்ந்த அஜீத் ரவியை சும்மா விட மாட்டேன். அவருடைய நிறுவனத்தில் இருந்து வெளியே வந்துவிட்டதால் என்னை பழிவாங்க தான் இப்படி செய்கிறார்கள். அவர்கள் ஒரு சிண்டிகேட் மாஃபியா நடத்துகிறார்கள். என்னை காட்டி மற்ற மாடல்களை மிரட்டுகிறார்கள்.

மற்ற மாடல்களை காப்பாற்ற நான் சிறைக்கு செல்லவும் தயார். என்னை ஏன் இவ்வளவு இழிவாக நடத்த வேண்டும். நான் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டால் என்ன செய்வார்கள். நான் ஜோவுக்கு கால் செய்து மிரட்டவில்லை. நான் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு பேசிய ஆடியோவை, திரித்து எனக்கு எதிராக பயன்படுத்துகிறர்கள். நான் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”, என மீரா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories