முன்னாள் கிரிக்கெட் வீரரும் இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுத் தலைவருமான ஜெயசூரியா தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயகவுக்கு அனுப்பி வைத்துள்ளார். தேர்வுக் குழுவில் உள்ள வேறு சில உறுப்பினர்களும் ராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சனத் ஜெயசூரியா கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்வுக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Popular Categories