January 25, 2025, 12:47 AM
24.9 C
Chennai

காத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்!

chennai central railway station
chennai central railway station

சென்னையில் கொரோனா நோய்த் தொற்று அதிகமாக பரவி வருவதை அடுத்து, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர்.

தமிழகத்தில் லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள், குறிப்பாக கட்டடத் தொழில், ஹோட்டல் தொழிலில் பணியாற்றி வந்தனர். தற்போது கொரோனா இத் தொழில்களை புரட்டிப் போட்டுவிட்டதால், இவர்கள் அனைவரும் தங்கள் வேலை இழந்துவிட்டனர்.

50 நாட்களாக ஊரடங்கு காரணமாக முடங்கிக் கிடந்த இவர்கள், தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் சொந்த மாநிலங்களுக்கு புறப்படத் தயாராகிவிட்டனர். இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல மத்திய அரசு, மாநில அரசுகள் ஏற்பாடுகள் செய்துள்ளன.

இதற்காக ரயில்வே துறையில் ரயில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த ரயில் நிலையங்களில் பாஸ் பெற்று காத்திருக்கின்றனர். வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னை பெருநகரத்தில் மட்டும் 20 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி ஆண்டுக்கணக்கில் பணிபுரிந்து வந்தனர். தென் கிழக்கு ஆசியாவிலேயே கார் தயாரிப்பில் சென்னை, திருப்பெரும்புதூர் முக்கிய கேந்திரமாக விளங்குவதால் இதைச் சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இங்கும் ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தனர். தற்போது இதில் ஏராளமான பணியாளர்கள், தங்கள் வேலையை ராஜினா செய்துவிட்டு தங்கள் மாநிலங்களுக்குப் புறப்பட்டுவிட்டனர். ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை சென்டரல் ரயில் நிலையங்களில் இத் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ALSO READ:  புயல் இல்ல... ஆன கனமழை இருக்கு..! எச்சரிக்கும் வானிலை மையம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!