நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் கிருஷ்ணர் கோவிலில் ருக்மணி கல்யாணம்
நடைபெறுவதையொட்டி காலை பக்தர்கள் சீர் கொண்டு வந்தனர், பின்னர் குரு
கீர்த்தனை, கல்யாண அஷ்டபதி, புதிய துணிகள் சுவாமிக்கு அர்பணிப்பு, சூர்ணிகை,
ப்ரவரம், கன்னிகாதானம், லக்னாஷ்டகம், மாங்கல்ய தாரணம், நலுங்கு, மாலை
மாற்றுதல், பூ பந்து விளையாட்டு, ஊஞ்சல் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை,
பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளாக பொது மக்கள் கலந்து கொண்டனர்.
விழாவினை ரவி பட்டச்சரியார்மற்றும் பொதுமக்களும் செய்திருந்தனர்
கிருஷ்ணர் கோவிலில் ருக்மணி கல்யாணம்
Published:


