சென்னை: மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு முந்திய ஆட்சியாளார்களால் அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து, காவிரி பாசன மாவட்ட விவசாயிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என அனைத்து பகுதியினரும் எதிர்த்து போராடினார்கள், திட்டத்தை அமுல்படுத்தக்கூடாது முழுமையான ரத்து செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்கள். இந்நிலையில் நாடாளுமன்ற மேலவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவுத்துறை அமைச்சர் மேந்திர பிரதான், டி.கே.ரெங்கராஜன் எழுப்பிய கேள்விக்கு கிரேட் ஈஸ்டர்ன் என்கிற கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்திற்கு மீத்தேன் எடுப்பதற்கு தமிழ்நாட்டில் மன்னார்குடி பகுதியில் 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அனுமதியளிக்கப்பட்டது என்றும், மேற்கண்ட நிறுவனம் தேவையான ஆவணங்களை இதுநாள் வரை சம்பப்பிக்க வில்லை, நினைவூட்டப்பட்ட பிறகும்கூட நிறுவனம் ஆவணங்களை சமர்ப்பிக்க வில்லை. இதற்க்கான காலம் 03.11.2013 முடிந்து விட்டது. ஒப்பந்தக் காரர் இந்த பகுதியில் மீத்தேன் எடுக்கும் நடவடிக்கைகளையும் தொடங்கவில்லை, ஒப்பந்த சரத்துக்களின்படி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்துள்ளார். ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனம், செயல்படுத்தாத காரணத்தால் செயல்படுத்த வில்லை, என்பது போன்று அமைச்சரின் பதில் உள்ளது. மீத்தேன் எரிவாயு எடுக்கப்பட்டால், காவிர் பாசன மாவட்டங்கள் பாலைவனமாகும் என்கிற பேராபாயத்தை மத்திய அரசு உணர்ந்து, திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும். அவ்வாற உறுதியளிக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என்பதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்… என்று கூறியுள்ளார்.
மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும்: இ.கம்யூனிஸ்ட்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari