
திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 45,108 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 11,290 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.
நாள்தோறும் ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள், 8 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 2000 பக்தா்கள், 1000 நன்கொடையாளா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள், தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணிவரை ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.
திருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் – 18004254141, 93993 99399.