malarkodi - 2026

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற சந்துரு என்பவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை செல்வமருதூரைச் சேர்ந்த மலர்க்கொடி என்ற இளம்பெண்ணிற்கு 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் சில வருடங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மலர்க்கொடி நான் தனியாக வாழ்ந்து கொள்கிறேன் என கூறிவிட்டு தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

ஆனால் சந்துரு தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்தும் அவர் வரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மலர்க்கொடிக்கும், ஒரு இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது

இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மலர்க்கொடி தனது குழந்தைகளுடன் பணகுடி அருேக உள்ள கலந்தபனையில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்.

அந்த வீட்டிற்கும் அந்த இளைஞர் வந்து சென்றதாக தெரிகிறது. மலர்கொடியை பிரிந்து வாழ்ந்தாலும் அவரின் நடவடிக்கைகளை தொடர்ந்து நோட்டமிட்டு வந்திருக்கிறார் சந்துரு.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

இந்த நிலையில் அந்த இளைஞர், தனது மனைவி வீட்டுக்கு வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த சந்துரு நேராக மனைவியிடம் சென்று இது தொடர்பாக கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

valubar - 2026

இதில் ஆத்திரம் அடைந்த சந்துரு மலர்க்கொடியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சந்துரு காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

இதையடுத்து சந்துருவை கைது செய்த போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று மலர்க்கொடி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending