புரோட்டா கோழிக்கறி காம்பினேஷன்.. உண்டவருக்கு நேர்ந்த விபரீதம்!

Published:

deadbody
deadbody

புரோட்டா சாப்பிட்ட தொழிலாளி சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அபிராமம் அருகே உள்ள அச்சங்குளத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் இவரது மனைவி ராதிகாவும் அப்பகுதியில் உள்ள சேம்பர் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று பாண்டி கமுதி கோட்டைமேட்டில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு சென்றுவிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா மற்றும் கோழிக்கறி சாப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு சென்ற பாண்டி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக பாண்டியை அபிராமம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதனைதொடர்ந்து முதலுதவி செய்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாண்டி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாண்டியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அபிராமம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img