புது தில்லி:
கேரள பவனில் மாட்டிறைச்சி பரிமாறப் பட்டதாகவும், அதனால் போலீஸார் சோதனை நடத்தியதாகவும் வந்த செய்திகளை காவல்துறை ஆணையர் மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தில்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “உணவகத்தில் போலீஸார் சோதனை நடத்தவில்லை. எங்களுக்கு புகார் வந்தவுடன் இது தொடர்பாக அங்கு ஏதேனும் போராட்டம் நடந்தால் பாதுகாப்பு அளிக்கவே அங்கு சென்றோம். அங்கு பணியாற்றும் ஊழியர்கள், தனியார் பாதுகாவலர்களை விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை செய் தோம். பாதுகாப்பு கருதி அங்கு போலீஸார் சிலமணி நேரம் இருந்தனர்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending