spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

- Advertisement -

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு வரும் இன்று விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க ஜூன் 4-ஆம் தேதி கடைசி நாளாகும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 28 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தேர்வுக்கு ரூ. 125 தேர்வுக் கட்டணத்துடன், ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ. 175 கட்டணத்தைச் செலுத்த வேண்டும். தேர்வறை அனுமதிச் சீட்டை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு மைய விவரங்கள் தேர்வறை அனுமதிச் சீட்டில் இடம் பெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கால அட்டவணை:

ஜூன் 28 – தமிழ் முதல் தாள்

ஜூன் 29 – தமிழ் இரண்டாம் தாள்

ஜூன் 30 – ஆங்கிலம் முதல் தாள்

ஜூலை 2 – ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஜூலை 3 – கணிதம்

ஜூலை 4 – அறிவியல்

ஜூலை 5 – சமூக அறிவியல்

ஜூலை 6 – விருப்ப மொழிப் பாடம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,173FansLike
387FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,896FollowersFollow
17,300SubscribersSubscribe