சென்னையில் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிற்குள் புகுந்தது. சென்னை முழுதுவதும் வெளுத்து வாங்கும் மழை கோபாலபுரம் பகுதியையும் விட்டுவைக்கவில்லை.

இதனால், அந்த பகுதியில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் அதிகரித்தது திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது. ஆங்காங்கே வெள்ள நீர் அப்படியே நின்றது. இதை அகற்ற அவரது வீட்டில் உள்ளவர்கள் முயன்றனர்.

இந்த தகவல் அறிந்த திமுக தொண்டர்கள் கருணாநிதி வீட்டிற்கு உதவ சென்றனர். ஆனால் அவர்கள் உதவியை மறுத்த கருணாநிதி ஏழை, எளிய மக்களுக்கு சென்று வெள்ள நிவாரணப் பணிகளை செய்ய அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending