கொலை முயற்சி புகாரில் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்தியா மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
எம்எல்ஏ சத்தியா, அவரது கணவர் மற்றும் ஆதரவாளர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அதிமுக உறுப்பினர் சுரேஷ் காவல் நிலையில் புகார் அளித்துள்ளார்.
மேலும் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட மனுதாரர் சுரேஷ் கோரிக்கை வைத்துள்ளார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் புகார் மீது 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.