என்டிஆர் ஃப்ளை ஓவர் பெயரை மாற்றிய ஜெகன் அரசு!

Published:

ntr flyover - 2026

என்டிஆர் ஃபளைஓவர், முன்னாள் எம்எல்ஏ கேதிரெட்டி சூரியபிரதாப் ரெட்டி ஃப்ளை ஓவராக மாற்றப்பட்டுள்ளது.

ஆந்திராவில் அரசாங்கம் மாறியபின் திட்டங்கள், பிராஜக்ட்களின் பெயர்களும் மாற்றப்பட்டு வருகின்றன.

புதிதாக அனந்தபுரம் மாவட்டம் தர்மபுரம் பட்டிணத்தில் கட்டப்பட்ட ஃப்ளைஓவர் பெயரை மாற்ற அரசு முடிவெடுத்தது. என்டிஆர் ஃப்ளைஓவர் என்ற பெயரை முன்னாள் எம்எல்ஏ கேதிரெட்டி சூரியபிரதாப்ரெட்டி ஃப்ளைஓவராக மாற்றியுள்ளது. இது தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

ஆயின் ஃப்ளைஓவர் பெயர் மாற்றப்படுவது குறித்து தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

2014ல் தெலுங்கு தேசம் கட்சி அரசாங்கத்தின் போது இந்த ஃப்ளைஓவர் கட்டுவதில் முனைந்ததென்று டிடிபி தலைவர்கள் தெரிவித்தனர். அன்றைய முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த ஃப்ளைஓவரை தொடங்கிவைத்தார் என்று நினைவுபடுத்தினர் என்டிஆர் பெயரை மாற்றியது சரியல்ல என்று அரசுக்கு விண்ணப்பம் செய்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img