என்டிஆர் ஃபளைஓவர், முன்னாள் எம்எல்ஏ கேதிரெட்டி சூரியபிரதாப் ரெட்டி ஃப்ளை ஓவராக மாற்றப்பட்டுள்ளது.
ஆந்திராவில் அரசாங்கம் மாறியபின் திட்டங்கள், பிராஜக்ட்களின் பெயர்களும் மாற்றப்பட்டு வருகின்றன.
புதிதாக அனந்தபுரம் மாவட்டம் தர்மபுரம் பட்டிணத்தில் கட்டப்பட்ட ஃப்ளைஓவர் பெயரை மாற்ற அரசு முடிவெடுத்தது. என்டிஆர் ஃப்ளைஓவர் என்ற பெயரை முன்னாள் எம்எல்ஏ கேதிரெட்டி சூரியபிரதாப்ரெட்டி ஃப்ளைஓவராக மாற்றியுள்ளது. இது தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ஆயின் ஃப்ளைஓவர் பெயர் மாற்றப்படுவது குறித்து தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
2014ல் தெலுங்கு தேசம் கட்சி அரசாங்கத்தின் போது இந்த ஃப்ளைஓவர் கட்டுவதில் முனைந்ததென்று டிடிபி தலைவர்கள் தெரிவித்தனர். அன்றைய முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த ஃப்ளைஓவரை தொடங்கிவைத்தார் என்று நினைவுபடுத்தினர் என்டிஆர் பெயரை மாற்றியது சரியல்ல என்று அரசுக்கு விண்ணப்பம் செய்தனர்.