மே.1ல் குருவித்துறை கோவிலில் குரு பெயர்ச்சி விழா!

kuruvithurai guru bhagvan - 2026
#image_title

குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா மே 1ஆம் தேதி மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்

குருவித்துறை குருபகவான்கோவில் குருபெயர்ச்சி விழா மே 1ம் தேதி குரு பகவான் மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு 29ஆம் தேதி திங்கள்கிழமை முதல் 1ஆம் தேதி புதன்கிழமை முடிய நடைபெற உள்ளது.

மதுரைமாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவில் மிகவும்சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு சித்திரரதவல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக இருக்கிறார்.அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.

குரு பெயர்ச்சி விழா

ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்று ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது முன்னிட்டு குரு பெயர்ச்சி விழா சிறப்பாக மூன்று நாட்கள் நடைபெறும்.

இவ்விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகைபுரிந்து குரு பகவானைத் தரிசித்து செல்வார்கள். இந்த ஆண்டு வருகிற 29ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9.30அளவில் லட்சார்ச்சனை தொடங்குகிறது 1 ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.அன்று மதியம் 3மணி அளவில் யாகசாலை தொடங்கி.5.21மணிக்குள் பரிகார மகாயாகம், மஹாபூர்ணாஹுதி, திருமஞ்சனம், சிறப்புபூஜைகள் நடைபெறுகிறது.

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்:

குருபெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், மிதுனம்,சிம்மம், துலாம்,தனுசு,கும்பம் மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும்.

குரு பெயர்ச்சி முன்னிட்டு லட்சார்ச்சனைமற்றும் பரிகார செய்ய விரும்பும் ராசிக்காரர்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ரூபாய் 200 மட்டும் செலுத்தும் பக்தர்களுக்கு மே 1ஆம் தேதி யாக சாலையில் முன் மதியம் 2 மணிக்கு மேல் 3 மணிக்குள் பெயர் ராசிக்கு சங்கல்பம் செய்யப்படும்.

இவர்களுக்கு மஞ்சள், குங்குமம், லட்டு, அதிரசம், முறுக்கு,சிறிய படம் பிரசாதமாக வழங்கப்படும். ரூபாய் 500 செலுத்தும் பக்தர்களுக்கு மே 2ம் தேதி முதல் மே 16ஆம் தேதி முடிய காலை 6 மணி முதல் 7:00 மணிக்குள் சிறந்த முறையில் குரு பகவான் சன்னதி முன்னிலையில் குரு பகவானுக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படி செய்து பரிகார ராசிகளுக்கு தனித்தனியாக அர்ச்சனை செய்யப்படும்.

முன் பதிவு செய்யும் பக்தர்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த தேதியில் நேரடியாக குருபகவான் சன்னதியில் பிரசாதம் வழங்கப்படும். குரு பகவான் சக்கரத்தாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி டாலர்1, மஞ்சள், குங்குமம்,பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விழா ஏற்பாடுகள்

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி,சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ்,மற்றும் சுகாதாரத்துறை ஆகியோர் குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்துஆய்வு செய்து வருகின்றனர். குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கார்த்திகை செல்வி கோவில் பணியாளர்கள் நாகராஜன் மணி நித்தியா,ஜனார்த்தனன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கூடுதலாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது கூடுதலாக குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. குரு பெயர்ச்சி விழாவை பக்தர்கள் காணும் வண்ணம் எல்இடிதிரை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

        தரிசனத்திற்கு கூடுதல் நேரம்

குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அன்று இரவு 10 மணி வரை தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினசரி காலை 8 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பகல் 3.30மணி முதல் மாலை 6 மணி வரையும், வியாழக்கிழமை அன்று காலை 7.30மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 3:30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்களுடைய வசதிக்காக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories