December 5, 2025, 9:57 AM
26.3 C
Chennai

பாரதத்தின் கௌரவத்தைக் காப்பாற்றியது ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை!

vasudevananda saraswathi sankaracharya - 2025

பிரதமர் நரேந்திர மோடி சனாதன தர்மத்தைக் கட்டிக் காத்து வருகிறார் என, மதுரை வந்த ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகி பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசுதேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஶ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வேண்டுகோளின்படி, தென் மாநில கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். அதன்படி,
ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியான பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசு தேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் இன்று
மதுரை வருகை புரிந்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சுவாமிகள், சின்ன சொக்கிகுளம் பெசன்ட் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்திற்கு வருகை புரிந்த சுவாமிகளுக்கு மதுரை சங்கர மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் வெங்கட் ரமணி, மற்றும் ராமேஸ்வரம் சங்கர மடத்தின் நிர்வாகி ஆடிட்டர் சுந்தர் மதுரை அனுஷத்தின் அணுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மதுரை சங்கர மடம் வாத்தியார் ராதாகிருஷ்ணன் சாஸ்திரிகள் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர், பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசுதேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது,

பாரத நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற நடந்தது தான் ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ளார்.

500 வருடமாக இருந்த ராமர் கோயில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது‌. பாரத நாட்டில் ராம ராஜ்யம் ஏற்பட இது வழிகாட்டியுள்ளது‌.

வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் எந்த வித வேறுபாடும் கிடையாது‌. தென் இந்தியாவில் இருந்து நிறைய மக்கள் அயோத்திக்கு வருகின்றார்கள். அயோத்தி ராமர் கோயில் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டியுள்ளது‌. பிரதமர் நரேந்திர மோடி சனாதன தர்மத்தை கட்டி காத்து வருகிறார்.” என்றார்.

தென் மாநிலங்களுக்கு புனித யாத்திரைக்காக அயோத்தியில் இருந்து புறப்பட்ட சுவாமிகள் ராமேஸ்வரம் சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர்
இளையாத்தான்குடி கைலாச நாதர் கோவில், கனக துர்க்கை கோவில், தஞ்சாவூர் பெரிய கோவில், பங்காரு காமாட்சி அம்மன் கோவில், திருவிடைமருதூர் , சிதம்பரம் உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்தனர்.

சுவாமிகளுடன் சன்னியாசி சிஷ்யர்கள் சங்கரானந்த கிரி பிரமானந்த சரஸ்வதி தக்ஷிண பாரத யாத்திரை குழு பொறுப்பாளர் வழக்கறிஞர் வேணுகோபால் ஆகியோர் வந்தனர். சுவாமிகள் மதுரையிலிருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories