நவ.18: இன்று நாக சதுர்த்தி!

Published:

naga-vazhipadu
naga-vazhipadu

தீபாவளி அமாவாசைக்குப் பிறகு நான்காம் நாள் சுக்லபட்ச சதுர்த்தி அன்று கார்த்திகை மாதத்தில் நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகையை முக்கியமாக இரு தெலுங்கு மாநிலங்களிலும் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் சில பகுதிகளிலும் கடைபிடிக்கிறார்கள். சிலர் சிராவண மாதம் சுக்லபக்ஷ சதுர்த்தி அன்று நாகசதுர்த்தி கொண்டாடுகிறார்கள்.

இன்று பெண்கள் சர்ப்பங்களின் தலைவனான நாகராஜாவுக்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். திருமணமான பெண்கள் உபவாசம் இருந்து கணவர், குழந்தைகளின் நலனுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். பக்தர்கள் பாம்பு புற்றுக்கு பால் வார்த்து வழிபடுகிறார்கள்.

அனந்தன், வாசுகி, சேஷன், பத்மன், கம்பாலன், காளியன், தக்ஷகன், கர்கோடகன், ஆஸ்வதாரன், திருதராஷ்டிரன், சங்கபாலன், பிங்கலன் என்ற 12 நாகங்களை இன்று வழிபடுகிறார்கள்.

naga-vazhipadu1
naga-vazhipadu1

விஷ பயம் நீங்கவும் வயல்கள் பாதுகாக்கப்படவும் கிராமங்களில் நாக சதுர்த்தி பண்டிகை அதிக அளவில் கொண்டாடப்படுகிறது.

நாகசதுர்த்தி அன்று சர்ப்பங்களை பூஜிப்பதால் ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷம், காலசர்ப்ப தோஷம் போன்றவற்றை சுப்ரமணியசுவாமி நீக்குவார் என்பது புராண வசனம்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

இன்று ஞானசக்தியாத்மா, ஸ்கந்தன் போன்ற16 நாமங்களால் சுப்ரமணியசுவாமியை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img