டெல்லியைப் போன்று தமிழகத்திலும் விரைவில் ஆட்சிமாற்றம் நடக்கும் என அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார். திருநெல்வேலியில் அவர் கூறியது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம். எங்களின் முதல் கையெழுத்து அதற்காகத்தான் இருக்கும். மாணவர்களுக்கு இலவச கல்வி அளிப்போம். தமிழகத்தில் சமச்சீர் கல்வியை சிபிஎஸ்சி தரத்திற்கு உயர்த்துவோம். அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் தமிழகத்தில் உருவாகும் என்றார். பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி, துணைப் பொதுச் செயலாளர் திருமலைக்குமாரசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Popular Categories