டெல்லியைப் போன்று தமிழகத்திலும் விரைவில் ஆட்சிமாற்றம் நடக்கும் என அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார். திருநெல்வேலியில் அவர் கூறியது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம். எங்களின் முதல் கையெழுத்து அதற்காகத்தான் இருக்கும். மாணவர்களுக்கு இலவச கல்வி அளிப்போம். தமிழகத்தில் சமச்சீர் கல்வியை சிபிஎஸ்சி தரத்திற்கு உயர்த்துவோம். அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் தமிழகத்தில் உருவாகும் என்றார். பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி, துணைப் பொதுச் செயலாளர் திருமலைக்குமாரசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் : அன்புமணி ராமதாஸ்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

