அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள திருக்களப்பூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்வேலவன் மனைவி கடந்த 18 ஆம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்த போது அதே ஊரைச் சேர்ந்த வேலாயுதம்(52) என்பவர், அவரிடம் தவறாக நடக்க முயன்றாராம். இது குறித்து அந்தப் பெண் ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் கவிதா வழக்கு பதிந்து வேலாயுதத்தை கைது செய்தார்.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

