நிர்மலா தேவி விவகாரத்தில் திடீர் திருப்பங்கள்…! என்னதான் நடக்கிறது மேல் மட்டத்தில்?!

aruppukkottai nirmala devi - 2026

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் திடீர் திருப்பங்கள் பல நிகழ்ந்துள்ளன. இன்று இரண்டாவது நாளாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், போலீஸாரின் விசாரணையை சிபிசிஐடி போலீஸார் வசம் மாற்றி உத்தரவிட்டுள்ளார் டிஜிபி ராஜேந்திரன்.

முன்னதாக, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற புகாரில் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார். இந்நிலையில், அவரிடம் இருந்து அவர் பயன்படுத்தி வந்த 3 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே இன்னொரு திருப்பமாக நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த ஐந்து நபர் கொண்ட குழுவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நியமித்திருந்தது. அதனை திடீரென வாபஸ் பெற்றுள்ளது பல்கலைக் கழகம்.

சர்ச்சைப் பேச்சு தொடர்பாக கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இப்போது சிபிசிஐடி வசம் விசாரணை ஒப்படைக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

nirmala devi - 2026

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநர் மாளிகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை சந்தித்துப் பேசினார். அப்போது பேராசிரியை விவகாரம் குறித்தும், பல்கலை சார்பில் நடத்தப்படும் விசாரணை தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதனிடையே, ஆளுநர் இந்தப் பிரச்னையை விசாரிக்க ஒருநபர் விசாரணைக் குழு அமைத்திருந்தார். அது குறித்தும் விவாதிக்கப் பட்டது. அப்போது, ஆளுநர் மாளிகையில் இருக்கும் சிலரே, இந்த ஒரு நபர் விசாரணைக் குழு தேவையில்லை என்றும், பல்கலை., அமைத்திருந்த 5 பேர் விசாரணைக் குழுவே போதும் என்றும், அந்தக் குழுவின் விசாரணையை ஆளுநர் கண்காணித்திருக்க ஏற்பாடு செய்யலாம் என்றும் கூறினராம்.

governor banwarilal purohit - 2026

இந்நிலையில், ஆளுநருடனான சந்திப்புக்குப் பின்னர், பல்கலைக் கழக துணைவேந்தர் செல்லத்துரை, தங்கள் பல்கலை., சார்பில் அமைக்கப் பட்ட விசாரணைக் குழுவைத் திரும்பப் பெற்றுள்ளார்.

முன்னதாக, தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, மாணவர்கள், பேராசிரியர்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் தலைவர் துணைவேந்தர். அவர்தான் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து உரிய நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்க ஆளுனர் ஏன் உத்தரவிட்டார் என்பது தெரியவில்லை. அவர் உத்தரவிட்டது ஏன்? இதில் குழப்பம் உள்ளது புரிகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்பது எனது கருத்து என்று கூறினார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories