February 20, 2026, 8:26 PM
27.3 C
Chennai

நிர்மலா தேவி விவகாரத்தில் திடீர் திருப்பங்கள்…! என்னதான் நடக்கிறது மேல் மட்டத்தில்?!

aruppukkottai nirmala devi - 2026

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் திடீர் திருப்பங்கள் பல நிகழ்ந்துள்ளன. இன்று இரண்டாவது நாளாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், போலீஸாரின் விசாரணையை சிபிசிஐடி போலீஸார் வசம் மாற்றி உத்தரவிட்டுள்ளார் டிஜிபி ராஜேந்திரன்.

முன்னதாக, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற புகாரில் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார். இந்நிலையில், அவரிடம் இருந்து அவர் பயன்படுத்தி வந்த 3 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே இன்னொரு திருப்பமாக நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த ஐந்து நபர் கொண்ட குழுவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நியமித்திருந்தது. அதனை திடீரென வாபஸ் பெற்றுள்ளது பல்கலைக் கழகம்.

சர்ச்சைப் பேச்சு தொடர்பாக கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இப்போது சிபிசிஐடி வசம் விசாரணை ஒப்படைக்கப் பட்டுள்ளது.

nirmala devi - 2026

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநர் மாளிகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை சந்தித்துப் பேசினார். அப்போது பேராசிரியை விவகாரம் குறித்தும், பல்கலை சார்பில் நடத்தப்படும் விசாரணை தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதனிடையே, ஆளுநர் இந்தப் பிரச்னையை விசாரிக்க ஒருநபர் விசாரணைக் குழு அமைத்திருந்தார். அது குறித்தும் விவாதிக்கப் பட்டது. அப்போது, ஆளுநர் மாளிகையில் இருக்கும் சிலரே, இந்த ஒரு நபர் விசாரணைக் குழு தேவையில்லை என்றும், பல்கலை., அமைத்திருந்த 5 பேர் விசாரணைக் குழுவே போதும் என்றும், அந்தக் குழுவின் விசாரணையை ஆளுநர் கண்காணித்திருக்க ஏற்பாடு செய்யலாம் என்றும் கூறினராம்.

governor banwarilal purohit - 2026

இந்நிலையில், ஆளுநருடனான சந்திப்புக்குப் பின்னர், பல்கலைக் கழக துணைவேந்தர் செல்லத்துரை, தங்கள் பல்கலை., சார்பில் அமைக்கப் பட்ட விசாரணைக் குழுவைத் திரும்பப் பெற்றுள்ளார்.

முன்னதாக, தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, மாணவர்கள், பேராசிரியர்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் தலைவர் துணைவேந்தர். அவர்தான் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து உரிய நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை எடுக்க ஆளுனர் ஏன் உத்தரவிட்டார் என்பது தெரியவில்லை. அவர் உத்தரவிட்டது ஏன்? இதில் குழப்பம் உள்ளது புரிகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்பது எனது கருத்து என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories