கரூரில் கொரோனா நோயாளி உயிரிழப்பு; சிகிச்சை அளித்த சித்த மருத்துவர் மீது வழக்கு!

karur medical college - 2026
File Picture

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் மளிகைக் கடை நடத்தி வந்த 47 வயதுடைய ஆண் ஒருவருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கரூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில் இறந்தவருக்கு கடந்த 25 மற்றும் 26-ந் தேதிகளில் நொய்யல் குறுக்குச்சாலை பரமத்தி ரோட்டில் உள்ள சித்தா மருத்துவமனையில் வைத்து மருத்துவர் ராஜேஷ் என்கிற சண்முகம்(வயது 65) சிகிச்சை அளித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அன்பழகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு கரூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பாக்கியலட்சுமிக்கு அவர் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து டாக்டர் பாக்கியலட்சுமி தலைமை யிலான மருத்துவ குழுவினர் ராஜேஷ் நடத்தி வரும் சித்த மருத்துவமனைக்கு சென்று சண்முகத்திடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மளிகைக்கடைக்காரருக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. மேலும், சண்முகம் முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

இதுகுறித்து, வேலாயுதம்பாளையம் போலீசில் பாக்கியலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், ராஜேஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ராஜேசுக்கு, 3 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் ஹோமியோபதி மருத்துவமும், மற்றொருவர் எம்.பி.பி.எஸ். படித்துள்ளனர். அவர்களும், தந்தையின் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் ராஜேசின் கிளினிக் மற்றும் அவர்கள் வசித்த வீட்டை தனிமைப்படுத்தியுள்ளனர்.

மேலும், அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பது தெரிய வரும்.

ராஜேசுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென தெரிய வந்தால் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த நிலையில் ராஜேஷ் குடும்பத்தினர், வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories