January 25, 2025, 8:17 AM
23.2 C
Chennai

ஆலங்குளம் அருகே ஆற்றில் பஸ் கவிழ்ந்தது: பிளஸ்-2 மாணவன் பலி: 30 பேர் படுகாயம்

திருநெல்வேலி அடுத்த ஆலங்குளத்தில் இருந்து அரசு பேருந்து தடம் எண் 303 நெல்லை டவுண் பஸ் நிலையத்திற்கு நேற்று செவ்வாய் கிழமை மாலை புறப்பட்டு சென்றது. பஸ்சில் பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்பட 40க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஆலங்குளம் அடுத்த நெட்டூர் ஆற்றுப்பாலம் அருகே வரும் போது பஸ், டிரைவர் கட்டுப்பாட்டை மீறி தடுப்பு சுவரின் மீது மோதி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுப்பையாபுரத்தை சேர்ந்த கோயில் என்பவரின் மகன் சிவரத்தினம் (17) சம்பவ இடத்தில் இறந்தார். பஸ்சில் இருந்த மாணவிகள், பெண்கள், முதியவர்கள் உள்பட 30 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தோருக்கு பாளை அரசு மருத்துவமனை, ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் இறந்த மாணவன் சம்பவத்தன்று பிளஸ்-2 அரசு தேர்வு எழுதி விட்டு பஸ்சில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரிக்கிறார்கள். இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. siva

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.