சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவையை விரைவில் தொடங்காவிட்டால் திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் ஜெ.அன்பழகன் தந்தை கி.ஜெயராமன் நினைவு நாள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசினார் ஸ்டாலின். அப்போது … ஜெயலலிதா விடுதலையான பிறகு ரயில் சேவையை தொடங்கலாம் என்று அதிமுக ஆட்சி திட்டமிடுகிறதா? அவர் வரும் வரை மக்கள் காத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். சென்னை மெட்ரோ ரயில் சேவையை விரைவில் தொடங்கா விட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்துவோம். சென்னை உள்பட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக தொண்டர்களுடன் போராட்டம் நடத்துவோம். அனுமதி தராவிட்டால் சிறை நிரப்பும் போராட்டத்தை திமுக நடத்தும். என்றார்.
Popular Categories