December 5, 2025, 4:27 PM
27.9 C
Chennai

சிறப்பாக நடந்த நெல்லையப்பர் கோயில் குடமுழுக்கு: சர்ச்சையை கிளப்பிய விஜிலா சத்யானந்த்

KUMBABISHEKAM nellaiappar temple - 2025

திருநெல்வேலி: திருநெல்வேலியில் அருள்பாலிக்கும் நெல்லையப்பர் – காந்திமதியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்துக்குப் பின்னர் 14 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த வருடம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு ரூ.4.92 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா, கடந்த 20 ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி மாலை வரை 5 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

இதன் பின்னர் வெள்ளிக்கிழமை காலை ஆறாம் கால யாக சாலை பூஜை, பரிவார மூர்த்திகள் யாக சாலை பூர்ணாஹுதி, நாடி சந்தானம், ஸ்பர்ஸ ஆஹுதி, யாத்ரா தானம் ஆகியவை நடைபெற்றன. பின்னர் நெல்லையப்பர், காந்திமதியம்மன், வேணுவனநாதர், அனைத்து தேவ தேவியர்க்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

nellaiappar temple1 - 2025

தூத்துக்குடியைச் சேர்ந்த ரா.செல்வம் பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி மகா தீபாராதனை செய்தனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு வைபவத்தின் போது, நெல்லையப்பா போற்றி, காந்திமதியம்மா போற்றி, நமச்சிவாய வாழ்க முழக்கங்கள் விண்ணதிர்ந்தன. புனித கும்ப நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடைபெற்ற போது கருடன் வட்டமிட்டது. அதைக் கண்டு பக்தர்கள் பக்திப் பரவசத்தில் ஹர ஹர கோஷமெழுப்பினர்.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை, மகாஅபிஷேகம் நடத்தப்பட்டு, சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தின் போது திருமுறையில் பாடப் பெற்ற இசைக் கருவிகளான உடல், தாளம், திருச்சங்கு, சின்னம், எக்காளம், கொம்பு, துத்திரி உள்ளிட்டவை இசைக்கப்பட்டன.

nellaiappar temple - 2025

கும்பாபிஷேகத்துக்காக, பாதுகாப்பு பணியில் 1,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காண வசதியாக 5 இடங்களில் பிரம்மாண்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

சர்ச்சையைக் கிளப்பிய விஜிலா சத்யானந்த்:

நெல்லையப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதே பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் தான். முதலில் அதிகாலை வைத்திருந்த முஹூர்த்த நேரம் பின்னர் காலை 9.30 மணிக்கு மேல் 10 25 மணிக்குள் என்று மாற்றப் பட்டது. கும்பாபிஷேக தேதி சரியில்லை என்று பலரும் தெரிவித்து, விடாப்பிடியாக கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த இரண்டு அமைச்சர்கள் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சொந்த ஊரில் தேரோட்டம் காணச் சென்றதால் கால தாமதம் ஏற்பட்டது..

இந்து ஆகம விதிப்படி கோவில் மூலவர் சன்னிதி மேல் பெண்கள் ஏறக் கூடாது.. அரசியல் பிரமுகர்கள் ஆட்சித்தலைவர் அனைவரும் கீழே கூடி இருக்க மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் இருவரும் மூலவர் சந்நிதி மேல் பகுதியில் ஏறினர். இதைக் கண்டு, இந்து அமைப்பைச் சேர்ந்த ஒரு பிரமுகர் கூச்சலிட்டார். இதைக் கேட்டு அவர்கள் கீழே இறங்கினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..

இதை அடுத்து இந்து அமைப்புகள் விஜிலா சத்யானந்த் விவகாரத்தை கையிலெடுக்க முடிவு செய்துள்ளன. கிறிஸ்தவர் எப்படி இந்துக்கள் ஆகம விதியை மீறி செயல்படலாம் என போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories