
சென்னை: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தவறான முறையில் கையாளும் மக்கள் விரோத பழனிசாமியின் அரசுக்கு எனது கண்டனம் என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன்.
இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் தெருக்களிலும் தேடித் தேடி ஜாக்டோ ஜியோ அமைப்பினரை கைது செய்திருப்பது கண்டிக்கத் தக்கது என்று குறிப்பிட்டுள்ளது.
அவரது டிவிட்டர் அறிக்கை…
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தவறான முறையில் கையாளும் மக்கள் விரோத பழனிசாமியின் அரசுக்கு எனது கண்டனம் pic.twitter.com/UfSzvwUrTS
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 8, 2018

