இன்று முதல் செங்கோட்டை – கொல்லம் மலைப் பாதையில் பாசஞ்சர் ரயில் இயக்கம்!

senkottai rail passengers4 - 2026

செங்கோட்டை: திங்கள் கிழமை இன்று முதல் (ஜூலை 9) செங்கோட்டை கொல்லம் மலைப் பாதையில் பாசஞ்சர் ரயில் – பயணிகள் ரயில் இயக்கப் பட்டது. இன்று முற்பகல் 11.35க்கு செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ரயில் பின்னர் 11.55க்கு கொல்லம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

இன்று முதல் நாள் என்பதால், செங்கோட்டை பயணிகள் நல சங்கத்தினர் சார்பில், கொல்லம் செல்லும் முதல் ரயிலின் டிரைவர், உடன் இருந்த பணியாளர்கள், காவலர்கள் ஆகியோருக்கும், பயணிகளுக்கும் இனிப்பு வழங்கப் பட்டது. தொடர்ந்து, ரயில் இஞ்சின் அருகே சென்று, செங்கோட்டை பயணிகள் நலச் சங்கத்தினர் சார்பில் டிரைவருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப் பட்டது. தொடர்ந்து 11.55க்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.

senkottai rail passengers3 - 2026

செங்கோட்டையில் இருந்து பகவதிபுரம், ஆரியங்காவு, நியூ ஆரியங்காவு, கழுதருட்டி, தென்மலை வரை அந்த ரயிலில் சென்ற செங்கோட்டை பயணிகள் நலச் சங்கத்தினர், பின்னர் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை நோக்கி மறு மார்க்கத்தில் இன்று காலை 10.35க்கு புறப்பட்டு வந்த ரயிலில் தென்மலையில் ஏறி செங்கோட்டைக்கு திரும்பினர்.

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!
செங்கோட்டை - கொல்லம் ரயில் பாதையில் தென்மலை ரயில் நிலையத்துக்கு முன் வரும் புகழ்பெற்ற பாரம்பரியமான 13 கண் பாலம்...
செங்கோட்டை – கொல்லம் ரயில் பாதையில் தென்மலை ரயில் நிலையத்துக்கு முன் வரும் புகழ்பெற்ற பாரம்பரியமான 13 கண் பாலம்…

இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து ஏற்கெனவே செங்கோட்டைக்கு இயக்கப்பட்ட ரயிலின் நீட்டிப்புதான். திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்பட்ட ரயிலே கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை வரும் ரயில், திருநெல்வேலிக்கு தொடர்ந்து செல்கிறது. எனவே திருநெல்வேலியில் இருந்து கொல்லம் வரை இந்த ரயிலில் பயணிக்கலாம் என்பது பயணிகளுக்கு மிகவும் வசதியான வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

இந்த ரயில்கள் இயக்க நேரம், நிறுத்தும் இடங்கள் குறித்த முந்தைய செய்திக்கு படிக்க… ஜூலை 9 திங்கள் முதல் கொல்லம்-செங்கோட்டை பாசஞ்சர் இயக்கம்

senkottai rail passengers1 - 2026

முன்னதாக, செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் நலச் சங்கத்தினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயில்வே பாதுகாப்புக்காக ரயில் நண்பர்கள் குழுவினர் அனைவரும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

senkottai rail passengers2 - 2026

செங்கோட்டை ரயில் நண்பர்கள் குழுவினர் தற்போது 10க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பு, பயணிகளுக்கான உதவிகள் ஆகிய பணிகளில் தன்னார்வத் தொண்டர்களாக இணைந்து பணி செய்கின்றனர்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories