December 5, 2025, 8:26 PM
26.7 C
Chennai

இன்று முதல் செங்கோட்டை – கொல்லம் மலைப் பாதையில் பாசஞ்சர் ரயில் இயக்கம்!

senkottai rail passengers4 - 2025

செங்கோட்டை: திங்கள் கிழமை இன்று முதல் (ஜூலை 9) செங்கோட்டை கொல்லம் மலைப் பாதையில் பாசஞ்சர் ரயில் – பயணிகள் ரயில் இயக்கப் பட்டது. இன்று முற்பகல் 11.35க்கு செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ரயில் பின்னர் 11.55க்கு கொல்லம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

இன்று முதல் நாள் என்பதால், செங்கோட்டை பயணிகள் நல சங்கத்தினர் சார்பில், கொல்லம் செல்லும் முதல் ரயிலின் டிரைவர், உடன் இருந்த பணியாளர்கள், காவலர்கள் ஆகியோருக்கும், பயணிகளுக்கும் இனிப்பு வழங்கப் பட்டது. தொடர்ந்து, ரயில் இஞ்சின் அருகே சென்று, செங்கோட்டை பயணிகள் நலச் சங்கத்தினர் சார்பில் டிரைவருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப் பட்டது. தொடர்ந்து 11.55க்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.

senkottai rail passengers3 - 2025

செங்கோட்டையில் இருந்து பகவதிபுரம், ஆரியங்காவு, நியூ ஆரியங்காவு, கழுதருட்டி, தென்மலை வரை அந்த ரயிலில் சென்ற செங்கோட்டை பயணிகள் நலச் சங்கத்தினர், பின்னர் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை நோக்கி மறு மார்க்கத்தில் இன்று காலை 10.35க்கு புறப்பட்டு வந்த ரயிலில் தென்மலையில் ஏறி செங்கோட்டைக்கு திரும்பினர்.

செங்கோட்டை - கொல்லம் ரயில் பாதையில் தென்மலை ரயில் நிலையத்துக்கு முன் வரும் புகழ்பெற்ற பாரம்பரியமான 13 கண் பாலம்...
செங்கோட்டை – கொல்லம் ரயில் பாதையில் தென்மலை ரயில் நிலையத்துக்கு முன் வரும் புகழ்பெற்ற பாரம்பரியமான 13 கண் பாலம்…

இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து ஏற்கெனவே செங்கோட்டைக்கு இயக்கப்பட்ட ரயிலின் நீட்டிப்புதான். திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்பட்ட ரயிலே கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை வரும் ரயில், திருநெல்வேலிக்கு தொடர்ந்து செல்கிறது. எனவே திருநெல்வேலியில் இருந்து கொல்லம் வரை இந்த ரயிலில் பயணிக்கலாம் என்பது பயணிகளுக்கு மிகவும் வசதியான வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

இந்த ரயில்கள் இயக்க நேரம், நிறுத்தும் இடங்கள் குறித்த முந்தைய செய்திக்கு படிக்க… ஜூலை 9 திங்கள் முதல் கொல்லம்-செங்கோட்டை பாசஞ்சர் இயக்கம்

senkottai rail passengers1 - 2025

முன்னதாக, செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் நலச் சங்கத்தினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயில்வே பாதுகாப்புக்காக ரயில் நண்பர்கள் குழுவினர் அனைவரும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

senkottai rail passengers2 - 2025

செங்கோட்டை ரயில் நண்பர்கள் குழுவினர் தற்போது 10க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பு, பயணிகளுக்கான உதவிகள் ஆகிய பணிகளில் தன்னார்வத் தொண்டர்களாக இணைந்து பணி செய்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories