ஜூலை 9 திங்கள் முதல் கொல்லம்-செங்கோட்டை பாசஞ்சர் இயக்கம்

Published:

train new - 2026

செங்கோட்டை: வரும் திங்கள் 09/07/18 முதல் ஒரு பாசஞ்சர் ரயில் தினசரி் செங்கோட்டை கொல்லம் & கொல்லம் செங்கோட்டை இடையே இயக்கப்படும்.

ஒரு ரயில்(ரயில் எண் 56335) செங்கோட்டையிலிருந்து காலை 11.25 க்கு புறப்பட்டு மாலை 3.40 க்கு கொல்லம் போய் சேரும்.

அதே போல மற்றொரு ரயில் (ரயில் எண் 56336) கொல்லத்திலிருந்து காலை 10.30க்கு புறப்பட்டு பகல் 02.35க்கு செங்கோட்டைவந்து சேரும்.

இந்த ரயில்கள் செங்கோட்டை கொல்லம் இடையே கீழ்க்காணும் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
1)பகவதிபுரம்
2)ஆரியங்காவு ஹால்ட்
3)நியூ ஆரியங்காவு
4)இடப்பாளையம்
5)கழுதுவரட்டி
6)தென்மலை
7)ஒத்தக்கல்
8)இடமன்
9)புனலூர்
10)ஆவணீஸ்வரம்
11)குறி ஹால்ட்
12)கொட்டாரக்கரை
13)எழுகோன்
14)குண்டரா ஈஸ்ட்
15)குண்டரா
16)சந்தனத்தோப்பு
17)கிளிக்கொல்லூர்
18)கொல்லம்.

அதுபோல் வரும் திங்கள் 09/07/18 முதல் பாலக்காடு புனலூர் பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்கப்படும்.

பாலக்காட்டில் புறப்படும் ரயில் வண்டி எண் 16792 செங்கோட்டைக்கு அதிகாலை 03.45 க்கு‌வந்து சேர்ந்து 03.50க்கு திருநெல்வேலிக்கு‌ புறப்பட்டு திருநெல்வேலியை காலை 06.30க்கு அடையும்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

மறு மார்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் ரயில் எண் 16791 திருநெல்வேலியில் இரவு 10.30க்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு நள்ளிரவு 12.30க்கு வந்து 12.35க்கு பாலக்காட்டிற்கு புறப்படும்.

கூடிய விரைவில் நான்கு இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்படும்.

இதனை ரயில்வே அதிகாரிகள் குறிப்பை மேற்கோள் காட்டி செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் செயலாளர் கே.ஹெச்.கிருஷ்ணன் நம்மிடம் தெரிவித்தார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img