கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை; இந்து அறநிலையத்துறை அலுவலர் பணியாளர் மீது கொலைவெறி தாக்குதல்…!

indu office - 2026

கோயில் நிலத்தை மீட்க நடவடிக்கை;   இந்து அறநிலையத்துறை அலுவலர் பணியாளர் மீது கொலைவெறி தாக்குதல்…!

கோயில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்த  கோயில் செயல் அலுவலர், பணியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்கள் உள்ளது. இந்த இடத்தில் நிலம் அபகரிக்கும் நோக்கில் கட்டிடம் கட்ட முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி செயல் அலுவலர் சீனிவாசன் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிறு கிராமம் அருகே புஷ்பரதீஸ்வரர் கோயில் பணிகளை முடித்து மாலை 3 மணி அளவில் செயல் அலுவலர் சீனிவாசன், கோயில் பணியாளர் தனஞ்செயன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது முகமூடி அணிந்த சில மர்ம நபர்கள் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யும் நோக்கில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

அப்போது, ‘எங்கள் மீதே போலீசில் புகார் கொடுப்பீங்களா?’ என்று மிரட்டியுள்னர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், செயல் அலுவலர் மற்றும் கோயில் பணியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று அறநிலையத்துறை ஊழியர்கள் மண்டல இணை ஆணையர் அலுவலகம் மற்றும் கோயில்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

. சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகம் முன்பு கூட்டமைப்பு மாநில தலைவர் சீதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அறநிலையத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சீதரன் நேற்று காலை துறையின் ஆணையர் பணீந்தர்ரெட்டியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘செயல் அலுவலர் மற்றும் கோயில் பணியாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும்.

மேலும் செயல் அலுவலர் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு அளிக்க வேண்டும். கோயில் செயல் அலுவலர்கள், ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் அளிக்கும் போது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் துறை தலைவருக்கு பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்கிறோம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories