December 5, 2025, 2:32 PM
26.9 C
Chennai

‘நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்’ – புத்தக வெளியீடு!

mapla violence - 2025

டி.எஸ். வேங்கடேசன்

வரலாற்றில் 6 கோடிக்கும் அதிகமான ஹிந்துகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நூறாண்டுகளை கடந்த கேரளத்தின் தற்போதைய மலப்புரத்தில் அரங்கேறிய மாப்ளா கலவரம் குறித்து தமிழில் சரித்திர ஆதாரங்களுடன் புத்தகம் “நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம் “ வெளிவந்துள்ளது.

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத இணை பொதுச் செயலாளர் கோ ஸ்தாணுமாலயன் எழுதிய ‘நூறாண்டு காணும் மாப்ள் கலவரம்’ புத்தகம், ஜூலை 13 அன்று, சென்னை மீனாட்சி கல்லூரி வளாக அரங்கில் வெளியிடப்பட்டது.

நூலாசிரியர் தமது உரையில், மாப்ளா கலவரம் குறித்த உண்மையான தகவல்கள் தரப்படவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லீம்கள் உண்மையை மறைத்து அதை சுதந்திரப் போராட்டத்துக்கான முன்னோடியாகக் கூறி வருகின்றனர். இதில் சிறிதும் உண்மையில்லை.

பாரதத்தில் அரங்கேறும் போராட்டங்களுக்கு வெளிநாட்டு சதி, பின்னணி, காரண காரியங்கள் இருக்கக் கூடும். இது ஆங்கிலேயர்களுக்கு எதிரானது இல்லை. விடுதலைப் போராட்டத்துக்கான முன்னெடுப்பும் இல்லை. புத்தகத்தின் இறுதியில் “பாரதத்தின் பாரம்பரியத்தின் மேல் பற்றுக் கொண்ட அனைவரும் இதன் கோரத்தை ( மாப்ளா கலவரம்) உணரவில்லையெனில், மீண்டும் ஒரு கொடுமையான படிப்பினையை கற்றுத்தரத் தயாராக உள்ளது. படிப்பினைகளை கற்பதே நமது வரலாறாகி விடக் கூடாது என்பதே இப்புத்தகத்தின் நோக்கம்” என எழுதியுள்ளதை சுட்டிக் காட்டினார்.

“இங்கு வாழும் பிற மதத்தினரின் மனதில் தங்கள் முன்னோர் ஹிந்துகளே என்ற எண்ணங்களை முதலில் ஆழப் பதிக்கச் செய்ய வேண்டும். அதே சமயம், சொந்த சமுதாயத்தையும் வலுப்படுத்த வேண்டும். வலிமை இல்லாதவர்கள், அபலைகள் , அவர்கள் தாக்குதலுக்கு உட்பட்டதே வரலாறு சொல்லும் செய்தி. மீண்டும் மாப்ளா கலவரங்கள் நிகழ அநுமதிக்கக் கூடாது. இந்த எண்ணமே கயவர்களின் சிந்தையில் தோன்றா வண்ணம் ஹிந்து சமுதாயம் பலம் பெறுவதும் காலத்தின் கட்டாயமாகும். எல்லாக் கலவரங்களும் இத்தோடு முற்றுப் பெறட்டும்”என புத்தகத்தின் கடைசி செய்தியாக கூறியுள்ளதாக ஸ்தாணுமாலயன் கூறினார்.

இந்தப் புத்தகத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தேசபக்தர்களுக்கு சமர்பணம் செய்வதாக நூலாசிரியர் தெரிவித்தார்.

நூலின் முதல் பிரதியை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஐ வி மணிவண்ணன், மீனாட்சி சுந்தர்ராஜன் பொறியியல் கல்லூரியின் செயலாளர் டாக்டர் கே எஸ் பபாய், கேஇஎச் குழுமத்தின் மேலாண் இயக்குநர் வசந்த் குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

mapla violence book horz - 2025

முன்னாள் உயர் கல்வித்துறை சிறப்புச் செயலாளர் மணிவண்ணன் பேசுகையில், பொதுவாக துயர நிகழ்ச்சிகளின் 100வது ஆண்டை கொண்டாடுவதில்லை. நினைவு கூர்வதில்லை. ஆனால், மாப்ளா கலவரத்தின் உண்மைநிலை மக்களுக்கு தெரிவிக்கப்படாமல் அவரவர் கருத்து, கொள்கைகளுக்கு ஏற்ப திரித்து கூறப்பட்டு வருகிறது.

மாப்ளா கலவரம் விவசாயிகளின் போராட்டம் எனவும், சுதந்திரப் போராட்டத்துக்கு முதல் விதை எனவும் கூறிவருகின்றனர். ஓட்டோவன் அரசுக்கு எதிராக முஸ்லீம்கள் நடத்திய போராட்டத்துக்காக கேரளத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் கேரளத்தின் மலபார் பகுதியில் ஆதரவாக நடத்தப்பட்டதே இது.

திப்பு சுல்தான், அவரது தந்தை ஹைதர் அலி காலத்தில் மதம் மாற மறுத்த ஹிந்துகளைக் கொன்றனர்.பெண்கள் அவர்கள் கணவர், சகோதர்கள் கொடூரமாக வண்புணர்வு செய்யப்பட்டனர். அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு இஸ்லாமியர்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. பிறகு வந்த ஆங்கிலேயர்கள் இதை மீண்டும் ஹிந்துகளுக்கு மீட்டு தந்தனர். இதற்கு முஸ்லீம்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதைத்தான் முஸ்லீம்களும், கம்யூனிஸ்ட்டுகளும் விவசாயப் போராட்டம் என்கின்றனர்.

மாப்ளா கலவரத்தின் போது ஹிந்துகள் தான் குறிவைத்து தாக்கப்பட்டனர். விரல் விட்டு எண்ணும் அளவில்தான் ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். எனவே இது ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டம் எனக் கூற முடியாது. இதுபோன்ற கொடூர துயர சம்பவங்கள் வேறு எங்கும் நடக்கவில்லை.

நூலாசிரியர் உண்மைத் தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளார். அடுத்தது என்ன என்ற ஆவலை தூண்டும் வகையில் சம்பவங்களைக் கொடுத்துள்ளார். படிப்பதற்குஎளிதாக பெரிய எழுத்துகளில் அழகுற வடிவமைத்துள்ளார். இந்த புத்தகம் மலப்புரம் மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமியர்கள் மற்றும் அவர்களின் தீவிர மதமாற்ற அநீதிகளை சரியான முறையில் விளக்குகிறது. அனைத்து தரப்பினருக்கும் சம்பவத்தின் உண்மை நிலையை தெளிவாக நடுநிலையுடன் உள்ளது உள்ளவாறு எடுத்துக் காட்டியுள்ளார்” என தெரிவித்தார்.

விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.100/-

1 COMMENT

  1. மிகவும் அவசியமான புத்தகம். நூற்றாண்டு விழாகாணும் என்ற முன் ஒட்டு மட்டும் தேவையில்லை.மாப்ளா முஸ்லிம் கலவரம் – 1921 என்ற பெயர்தான் சரியாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories