திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. கொடைக்கானலில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் ஏரி நிரம்பி மறுகால் பாய்வதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி, பாம்பார் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு உடனுக்குடன் சீரமைக்கப்பட்டது. கொடைக்கானல் சாலையில் டம்டம் பாறை உள்ளிட்ட சில இடங்களில் சாலையில் மரங்கள் விழுந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending