கண்ணூரில் கம்யூனிஸ்ட் குண்டர்கள் அராஜகம்! 83 வயது ஆர்.எஸ்.எஸ்., தொண்டரை அடித்து உதைத்த கொடூரம்!

Published:

kannur chandrasekar - 2026

கேரள மாநிலம் கண்ணூரில் கம்யூனிஸ்ட்களின் அராஜகத்துக்கு இலக்காகியுள்ளார் 83 வயது ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் சந்திரசேகரன்.

கண்ணூர் கிரிக்கெட் கிளப் செயலாளராகவும், கடந்த 1943ல் இருந்து ஆர்.எஸ்.எஸ்., தொண்டராகவும் இருந்து வரும் சந்திரசேகரன் இல்லத்துக்குள் புகுந்த கம்யூனிஸ்ட் குண்டர்கள் குழு, வீட்டில் இருந்த பொருள்களை எடுத்து உடைத்தது. அங்கிருந்த பூஜைப் பொருள்களை நாசப் படுத்தி, வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருள்கள், பூஜைப் பொருள்களை நாசப் படுத்தி, எடுத்துச் சென்று கிணற்றில் போட்டுள்ளனர்.

சந்திரசேகரன் கடுமையாகத் தாக்கப் பட்டுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கோபத்தையும் அதிருப்தியையும் பகிர்ந்து வருகின்றனர்!

ஏற்கெனவே கண்ணூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ரத்தக்களறியில் ஈடுபடும் நிலையில், சபரிமலை விவகாரத்தால் மேலும் மேலும் வன்முறைகள் பெருகியுள்ளன. இந்நிலையில், கேரளத்தை கம்யூனிஸ்ட் குண்டர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img