May 18, 2025, 7:08 PM
30.5 C
Chennai

மாணவர்களை தனிப்பட்ட இடங்களுக்கு பேராசிரியர்கள் அழைக்கக் கூடாது: சென்னை பல்கலை!

chennai university

மாணவர்களை தங்கள் வீடுகளுக்கோ, தனிப்பட்ட இடங்களுக்கோ பேராசிரியர்கள் அழைக்கக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் பணிபுரியும் பேராசிரியர்கள் மீது பாலியல் வன்கொடுமை குறித்த புகார்களை மாணவ மாணவியர் தெரிவிப்பது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

இது போன்ற பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளைத் தவிர்க்கவும், மாணவர்களின் நலன் காக்கவும், சென்னை பல்கலைக்கழகம் பேராசிரியர்கள், மாணவர்களை தங்கள் வீடுகள், தனிப்பட்ட இடங்கள் ஆகியவற்றுக்கு அழைக்கக் கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

முதுகலை மாணவர்கள், ஆராய்ச்சிப் பிரிவு மாணவர்கள் பொதுவாக, தங்களின் கல்வி சார்ந்து கல்லூரி நேரம் போக பேராசிரியர்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்திப்பது வழக்கம். இருப்பினும், அண்மைக் காலமாக பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகம் எழுப்பப் பட்டு வருவதால், அவற்றைத் தவிர்க்கவும், கல்வியில் தரத்தை மேம்படுத்தவும், சென்னை பல்கலைக்கழகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில், சுற்றுலா சென்ற இடத்தில் பேராசிரியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டதாகவும், 30க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப் பட்டதாகவும் புகார் எழுந்தது. இதற்காக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் குறித்து ஒரு கருத்தைத் தெரிவித்தார். ஆனால், வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் செயல்படும் கிறிஸ்துவ சர்ச்களுக்கான இடைத்தரகர்கள் சிலர், நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கடிதம் எழுதினர். இதை அடுத்து அவர் தனது கருத்தை திரும்பப் பெற்றார்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

இத்தகைய அவப்பெயர்களால் சென்னை பல்கலைக்கழகம் இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர் சேர்க்கை – விவரம்!

நேர்முகத்தேர்வு விவரங்களுக்கு கீழ்க்காணும் ~link 🔗~ஐ அழுத்தவும்

பெரியண்ணன் டிரம்ப்புக்கு… இந்திய தேசபக்தையின் கடிதம்!

ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.

வெளிவராத ரகசியங்கள்! என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?

மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

மாமன் பட வெளியீடு; மதுரையில் சூரியின் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மதுரை திருநகர் பகுதிகளில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 10 பேர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற

Topics

பஞ்சாங்கம் மே 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர் சேர்க்கை – விவரம்!

நேர்முகத்தேர்வு விவரங்களுக்கு கீழ்க்காணும் ~link 🔗~ஐ அழுத்தவும்

பெரியண்ணன் டிரம்ப்புக்கு… இந்திய தேசபக்தையின் கடிதம்!

ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.

வெளிவராத ரகசியங்கள்! என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?

மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

மாமன் பட வெளியீடு; மதுரையில் சூரியின் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மதுரை திருநகர் பகுதிகளில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 10 பேர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற

பஹல்காம்: இந்தியாவைப் பெருமைப் படுத்தும் மோடி!

பல இந்தியர்கள் தமது நலன் அறியாத அப்பாவிகளாக இருந்தாலும், பல சமயங்களில் சரியான வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடத் தெரியாமல் இருந்தாலும், அவர்களின் பூர்வ ஜென்ம பலன் மோடி காலத்தில் வேலை செய்கிறதோ?

‘சிங்காரவேலனே தேவா’ மூலம் நினைவில் நிற்கும் பாடலாசிரியர்!

திரைப்படப் பாடலாசிரியர் கு. மா. பாலசுப்பிரமணியம் (மே 13, 1920 – நவம்பர் 4, 1994)

Entertainment News

Popular Categories