December 6, 2025, 4:19 AM
24.9 C
Chennai

வரவேற்பு பேனர் விழுந்து பரிதாபம்! சாலையில் விழுந்து இளம்பெண் உயிரிழப்பு!

pallikkaranai accident subasri died - 2025

சென்னை தாம்பரம் அருகே திருமண வரவேற்பு பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்தார்.

சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக.,வினைச் சேர்ந்த அரசியல் பிரமுகரின் இல்லத் திருமண வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்துள்ளதாகக் கூறப் படுகிறது.

சென்னை பள்ளிக்கரணையில் குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வலது புறம் திரும்ப முயன்ற போது பேனர் திடீரென சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர் மீது, பின்னால் வந்த லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ.

பேனருக்கு சென்னை மாநகராட்சி, அண்மையில் தடை விதித்திருந்தது. அதை கடுமையாக நடைமுறைப்படுத்தி இருந்தால் இந்த விபத்து நிகழாமல் இருந்திருக்கும் என்று கூறுகின்றனர்.

pallikkaranai accident banner - 2025

மேலும், சாலை நடுவில் செண்டர் மீடியனில் போடப் பட்டிருக்கும் ஒயர்கள், மின் கம்பிகள், கேபிள், இணைய இணைப்பு வயர்கள் ஆங்காங்கே தொங்கியபடி இருப்பதால், செண்டர் மீடியனை ஒட்டிச் செல்லும் போது திடீரென வாகனத்தில் ஏதாவது ஒரு பகுதியில் பட்டு இழுத்து, சாலையில் நிலை தடுமாறி விழ வைத்துவிடுகிறது என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

இதனிடையே, சாலைவிபத்தில் மரணமடைந்த சுபஸ்ரீ(23) மரணத்துக்கு டிவிட்டர் பதிவில் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது…

அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல்! அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories