குழந்தையைப் பெற்று புத்தகப்பையில் வைத்திருந்த மாணவி!

baby 3 - 2026

கேரளாவில் கல்லூரி மாணவி ஒருவர் திருமணத்திற்கு முன்பே தனக்கு பிறந்த குழந்தையை புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் இடுக்கியில் உள்ள தனியார் கல்லூரியில் வாத்திகுடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் பயின்ற மற்றொரு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பல நாட்கள் தனிமையில் இருந்துள்ளதாக தெரிகிறது இதன் விளைவாக அந்த மாணவி கர்ப்பம் தரித்துள்ளார்.

தான் கர்ப்பமானதை வீட்டில் கடந்த ஆறு மாதமாக மறைத்து வந்துள்ளார். தான் காதலித்து வந்த இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் பின்னர் சில நாட்கள் கழித்து அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதைனை அறிந்து கருவை கலைக்க முயன்ற மாணவி மருத்துவமனைக்கு சென்றபோது கருவை கலைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது பெற்றோர்களுக்கு தெரியாமல் இவ்வளவு நாள் இருந்து வந்துள்ளார்.

திடீரென ஒரு நாள் உறவினர் ஒருவருக்கு தனக்கு குழந்தை பிறந்து விட்டதாகவும் குறை பிரசவம் என்பதால் குழந்தை இறந்து பிறந்ததாகவும் அதை மறைப்பதற்காக தனது புத்தகப் பையில் பிளாஸ்டிக் கவர் கொண்டு மறைத்து வைத்துள்ளதாக வாட்ஸ்அப் மூலம் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

உறவினர்கள் வாத்திகுடி காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பெண்னிடம் இருந்த பையை பார்த்தபோது அதில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ந்தனர்.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினரிடம் இளம்பெண் கூறியதாவது நான் கர்ப்பமாக இருப்பதை பெற்றோருக்கு தெரிவிக்காமல் பல நாட்கள் மறைத்து வந்ததாகவும் தற்போது அதை மறைக்க முடியாமல் கழிவறையில் சென்று குழந்தை பெற்றெடுத்து கொண்டதாகவும் அப்பெண் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் கொலை குற்றப் பிரிவின் கீழ் அப்பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவரை சிகிச்சைக்காக இடுக்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். படிக்கும் வயதில் காதலென சுற்றித்திரியும் இளைஞர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories