December 6, 2025, 1:18 AM
26 C
Chennai

விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததால்… விவாகரத்து பெற்றேன்: சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர்!

madurai
madurai

அங்கொடா லொக்கா விவகாரம்: தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர் பேட்டி

அங்கொடா லொக்கா மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை என்று வழக்கில் தொடர்புடைய சிவகாமசுந்தரியின் முன்னாள் கணவர் வழக்கறிஞர் வினோத் குமார் சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்..

இலங்கை நிழலுலக தாதா அங்கொடா லொக்கா மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி கடந்த இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவர் தங்கியதாக கூறப்படும் ரயிலார் நகர் கூடல் நகர் பகுதிகளில் சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று மதுரை சொக்கி குளத்தில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இவ்விவகாரத்துடன் தொடர்புடைய நபர்களுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு நேரில் ஆஜரானார் இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் சிவகாமசுந்தரியின் முன்னாள் கணவர் வழக்கறிஞர் வினோத்குமார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2006 ஆம் ஆண்டு சிவகாம சுந்தரிக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றது எனவும் அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் மட்டுமே அவருடன் வாழ்ந்ததாகவும் பிறகு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறினார். அதற்கான காரணங்களில் ஒன்றாக, சிவகாமசுந்தரி குடும்பத்தாருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருந்தது தனக்கு பிடிக்கவில்லை என குறிப்பிட்டார்.

madurai-police-crime-branch
madurai-police-crime-branch

தற்போதைய அங்கொடா லொக்கா வழக்கு விவகாரத்தில் எந்த விஷயமும் தனக்கு தெரியாது என்றும் தனது முன்னாள் மனைவி சிவகாம சுந்தரியுடன் முன்பே மணவிலக்கு ஏற்பட்டுவிட்டது என்றும், அதற்குப் பிறகு அவருடன் எந்தவித தொடர்பிலும் தான் இல்லை என்பதை சிபிசிஐடி விசாரணையில் தெளிவாகக் கூறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

தனக்கும் தனது முன்னாள் மனைவி சிவகாம சுந்தரிக்கும் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காதல் மலர்ந்து திருமணம் புரிந்து கொண்டதாகவும் குறிப்பிட்ட வினோத்குமார், திருமணத்துக்குப் பின்னர் இவர்களது குடும்பத்திற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதை தாம் அறிந்தததாகவும், அதனை பலமுறை கண்டித்ததாகவும் ஒரு கட்டத்திற்குப் பிறகு தாம் அதிலிருந்து முற்றிலுமாக விலகி விட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே வழக்கறிஞர் சிவகாம சுந்தரியின் பெற்றோர் பாண்டியம்மாள் மற்றும் தினகரன் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகினர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories