விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததால்… விவாகரத்து பெற்றேன்: சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர்!

madurai
madurai

அங்கொடா லொக்கா விவகாரம்: தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர் பேட்டி

அங்கொடா லொக்கா மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை என்று வழக்கில் தொடர்புடைய சிவகாமசுந்தரியின் முன்னாள் கணவர் வழக்கறிஞர் வினோத் குமார் சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்..

இலங்கை நிழலுலக தாதா அங்கொடா லொக்கா மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி கடந்த இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவர் தங்கியதாக கூறப்படும் ரயிலார் நகர் கூடல் நகர் பகுதிகளில் சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று மதுரை சொக்கி குளத்தில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இவ்விவகாரத்துடன் தொடர்புடைய நபர்களுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு நேரில் ஆஜரானார் இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் சிவகாமசுந்தரியின் முன்னாள் கணவர் வழக்கறிஞர் வினோத்குமார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2006 ஆம் ஆண்டு சிவகாம சுந்தரிக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றது எனவும் அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் மட்டுமே அவருடன் வாழ்ந்ததாகவும் பிறகு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறினார். அதற்கான காரணங்களில் ஒன்றாக, சிவகாமசுந்தரி குடும்பத்தாருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருந்தது தனக்கு பிடிக்கவில்லை என குறிப்பிட்டார்.

madurai-police-crime-branch
madurai-police-crime-branch

தற்போதைய அங்கொடா லொக்கா வழக்கு விவகாரத்தில் எந்த விஷயமும் தனக்கு தெரியாது என்றும் தனது முன்னாள் மனைவி சிவகாம சுந்தரியுடன் முன்பே மணவிலக்கு ஏற்பட்டுவிட்டது என்றும், அதற்குப் பிறகு அவருடன் எந்தவித தொடர்பிலும் தான் இல்லை என்பதை சிபிசிஐடி விசாரணையில் தெளிவாகக் கூறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

தனக்கும் தனது முன்னாள் மனைவி சிவகாம சுந்தரிக்கும் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காதல் மலர்ந்து திருமணம் புரிந்து கொண்டதாகவும் குறிப்பிட்ட வினோத்குமார், திருமணத்துக்குப் பின்னர் இவர்களது குடும்பத்திற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதை தாம் அறிந்தததாகவும், அதனை பலமுறை கண்டித்ததாகவும் ஒரு கட்டத்திற்குப் பிறகு தாம் அதிலிருந்து முற்றிலுமாக விலகி விட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே வழக்கறிஞர் சிவகாம சுந்தரியின் பெற்றோர் பாண்டியம்மாள் மற்றும் தினகரன் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகினர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories