சிறப்பான விசாரணை: 28 பெண்கள் உட்பட 152 காவலர்களுக்கு விருது!

Published:

police award
police award

குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டதற்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருதுகள் 152 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டதற்கான 152 காவலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் எட்டு பேர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, காவல் ஆய்வாளர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், சிதம்பர முருகேசன், கண்மணி ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளைப் பெறும் பணியாளர்களில், 15 பேர் சிபிஐ, மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையிலிருந்து தலா 11 பேர், உத்தரபிரதேசத்தில் இருந்து 10 பேர், கேரளா மற்றும் ராஜஸ்தான் காவல்துறையில் இருந்து 9 பேர், 7 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள், 6 பேர் குஜராத், கர்நாடகா, தில்லி காவல்துறையைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் 28 பெண் போலீஸ் அதிகாரிகள் அடங்குவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Related articles

Recent articles

spot_img