அளவுக்கு அதிகமா சிம் கார்டு இருக்கா..?

3 sim mobile
3 sim mobile

ஒரு போனில் இரண்டு சிம் கார்டு, மூன்று சிம் கார்டு என தொழில்நுட்பம் வளர வளர மொபைல் பயன்பாடும் சிம்கார்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது

தற்போது ஒருவரே இரண்டு மூன்று போன் வைத்திருக்கின்றனர். அதனைப் போல எத்தனை சிம்கார்டு உள்ளது என்று தெரியாத அளவுக்கு சிம் கார்டுகளையும் வாங்கி குவித்தவர்கள் பலர்.

அதிலும் சிலர் இலவசமாக சிம் கார்டு வாங்கி விட்டு அதை ஒரு மாதம் மட்டும் இலவசமாக பயன்படுத்தி விட்டு அப்படியே அதனை தூக்கி எறிந்து விட்டு இன்னொரு சிம் கார்டு வாங்கி மீண்டும் இன்னொன்று என மாறிக் கொண்டே இருப்பார்கள்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி இனி யாரும் அளவுக்கு அதிகமாக சிம் கார்டுகளை வாங்க முடியாது. ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை வைத்து எத்தனை சிம்கார்டு வேண்டுமானாலும் வாங்கலாம் என்பதால் நிறைய சிம் கார்டுகளை வாங்குகின்றனர்.

இனி அது ஒருபோதும் நடக்காது. மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகளின் படி ஒருவர் அதிகபட்சமாக 9 விழுக்காடு மட்டுமே வாங்க முடியும்.

அதுவும் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவர்களுக்கு 6 சிம்கார்டுகள் மட்டுமே அனுமதி. நீங்கள் வைத்திருக்கும் சிம்கார்டுகள் மீண்டும் வெரிஃபை செய்யப்படும்.

அவற்றை வைத்திருக்க வேண்டுமா வேண்டாமா என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். வேண்டாத சிம் கார்டுகளை டி ஆக்டிவேட் செய்து விடுவது நல்லது. சிம் கார்டுகளை வைத்து குற்றச் செயல்கள் அதிக அளவு நடைபெறுவதால் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு ஒரு சிம் கார்டு போதுமானது. அலுவலக பயன்பாட்டுக்கு இன்னொரு சிம்கார்டு வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக வைத்திருப்பது உங்களுக்கு ஆபத்து தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories