இந்திய நாட்டு சேவைக்கு 3 மகன்களையும் அனுப்பிய தாய்! வீரத்தாய் விருது!

subhulaksmi - 2026

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர், ராமகிருஷ்ணன். தமிழ்நாடு சர்வோதயா சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அவரின் மனைவி சுப்புலட்சுமி. இந்தத் தம்பதிக்கு மூன்று மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

இவர்களின் மகன்களான அரிராம், ரத்தினப்பா, சண்முகவேலாயுதம் ஆகிய மூவரும் ராணுவத்தில் சேவை செய்தவர்கள்.

subulakshmis sons - 2026

அரிராம் ராணுவத்தில் சென்னை ரெஜிமெண்டில் 20 வருடங்கள் பணிபுரிந்து ஹவில்தாராக ஓய்வு பெற்றுவிட்டார். ரத்தினப்பா போபாலிலும், சண்முக வேலாயுதம் தில்லியிலும் மருத்துவப் பிரிவில் ஃபார்மசிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறார்கள்.

ராணுவ சேவைக்கு தன் மூன்று மகன்களையும் அனுப்பி வைத்த சுப்புலட்சுமியைப் பாராட்டி இந்திய ராணுவத்தின் சார்பாக சுப்புலட்சுமிக்கு `வீரத்தாய்’ விருதும் வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது.

இந்திய ராணுவத்தின் சார்பாக நெல்லை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல அலுவலக இணை இயக்குநர் முருகன், விருது மற்றும் பதக்கத்தை வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது சுப்புலட்சுமியின் மூத்த மகன் அரிராம், நெல்லை மாவட்ட பா.ஜ.க தலைவர் மகாராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். `வீரத்தாய்’ விருது பெற்ற சுப்புலட்சுமி மிகவும் நெகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டார்.

award - 2026

இதுகுறித்து சுப்புலட்சுமி கூறியது‌.. மறைந்த என் கணவருக்கு நாட்டுப்பற்று அதிகம். அதிலும் சர்வோதய சங்கத்தில் இருந்ததால், தேசத்துக்கு நம்மால் முடிந்த வரையில் தொண்டு செய்ய வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். அதனால் மூன்று மகன்களையும் ராணுவத்தில் சேர்த்துவிட்டார்.

வீரத்தாய் சுப்புலட்சுமி
என் மகன்கள் நாட்டுக்குச் சேவையாற்றுவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

இந்த விருது பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஒவ்வொரு தாயும் தங்களின் குடும்பத்தில் இருந்து ஒருவரையாவது தேசப் பணிக்கு அனுப்ப வேண்டும். எனக்குக் கிடைத்த இந்த வீரத்தாய் விருது மற்ற தாய்மார்களுக்கும் அதற்கான உந்துதலைக் கொடுக்கும் என நம்புகிறேன்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories